மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
ஆடி முளைக்கொட்டு திருவிழா
உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் ஆடி முளைக்கொட்டு திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் கோலகலமாக தொடங்கியது. கன்னியா லக்கனத்தில் கோவில் தங்ககொடி மரத்தில் வேதவிற்பனர்கள் மந்திரங்கள் ஓத பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் ஆராதனைகளுடன் கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது.
பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கயிலாயக்காட்சி நடைபெறும்.
10 நாட்கள் நடைபெறும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் நாள்தோறும் அம்மனும் சுவாமியும் ஆடி வீதிகளில் வெள்ளி, சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், ரிஷப வாகனம், கிளி வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழாவின் முக்கிய நிகழ்வாக ஆடி 6 ஆம் நாள் நிகழ்வாக 22 ஆம் தேதி மாலை கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கயிலாயக்காட்சி நடைபெறும்.
தீர்த்த திருவிழாவுடன் ஆடி முளைக்கொட்டு திருவிழா
இரவு புஷ்பப்பல்லக்கில், அம்மன் ஆடி வீதி வலம் வந்த பின், உற்சவர் சந்நிதியில் அம்மன் சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து 24 ஆம் தேதி சைத்தோபசாரமும், 25 ஆம் தேதி பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழாவுடன் ஆடி முளைக்கொட்டு திருவிழா நடைபெறவுள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவின் போது கோவில் அறங்காவலகுழு்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், மற்றும் அறங்காவல் குழு உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
