கரூர் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு உற்சவர் ரெங்கநாதர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.


 




கரூர் மாவட்டம், மேட்டு தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு கொடியேற்றத்துடன் நாள்தோறும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார்.


 




இந்நிலையில் இன்று ஆலய மண்டபத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு உற்சவர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவிகளுக்கு திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், எலுமிச்சை சாறு, அபிஷேக பொடி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




ஆலயத்தின் பட்டாச்சாரியார் சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு துளசியால் நாமாவளிகள் கூறினார். அதைச் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் மேட்டு தெரு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.