கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.


 




கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பால முருகனுக்கு ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலையில் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தேர்வீதி அருள்மிகு விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு நடைபெற்ற பாலமுருகன் அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


 


இதேபோல், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமாள் திருவீதி உலா வந்தார்.


 




 


தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு ஆறுமுகம் சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் திருவீதி உலா காட்சி தந்தார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் மற்றும் மூலவர் ஆறுமுகசாமி , வள்ளி, தெய்வானை உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கொழுவிற்க செய்தனர்.


 




மேல தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட முருகப் பெருமான் திருவீதி உலா ஆலய முக்கிய வீதி வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடிகுந்தது. கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு முருகப்பெருமான் திருவீதி உலா நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.