சோமூர் காளியப்ப கவுண்டனூர் பகுதியில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ தொட்டிய கருப்பண்ண சுவாமி கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.




கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், சோமூர் கிராமம், காளியப்ப கவுண்டனூர் பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ தொட்டிய கருப்பண சுவாமி ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்யேக யாகசாலை அமைத்து முதல் காலையாக வேள்வி, இரண்டாம் காலையாக வேள்வி நடைபெற்றது. அதை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனை காட்டிய பிறகு, மேல, தாளங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட புனித கலச குடத்தை தலையில் சுமந்தவாறு கோபுர கலசம் வந்தடைந்தனர்.பின்னர் சிவாச்சாரியார்கள் பல்வேறு வேத மந்திரங்கள் கூறியபடி கோபுர கலசத்திற்கு புனித தீர்த்தத்தால் மகா கும்பாபிஷேக விழாவை நடத்தினர்.




அதைத் தொடர்ந்து ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ தொட்டிய கருப்பண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பூஜிக்கப்பட்ட புனித கலச தீர்த்தத்தால் மகா கும்பாபிஷே விழா நடைபெற்றது.அதை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித  தீர்த்ததால் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்ட பிறகு விபூதி பிரசாதம் வழங்கினர்.


தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சக்தி விநாயகர் ஆலயத்தில் வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை.


தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கு வைகாசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு உற்சவர் கணபதிக்கும், மூலவர் கணபதிக்கும் என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கும், உற்சவர் கணபதிக்கும் ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து அதை தொடர்ந்து சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.




பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர் .நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய அர்ச்சகர் சார்பாக சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.சோமூர் காளியப்ப கவுண்டனூர் பகுதியில் நடைபெற்ற பகவதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவைகாண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.