ஆடி முதல் வெள்ளி: கரூரில் ஸ்ரீ வாராகி அம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்

வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

Continues below advertisement

கரூரில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு உழவர் சந்தை வாராகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

Continues below advertisement

 

 


 

 

ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 

 


அதை தொடர்ந்து வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மாலை வாராகி அம்மனுக்கு ஒரு லட்சம் வளையலால் அலங்காரம் செய்யப்பட்டது. தெரிவித்துள்ளனர்.

 

 


 

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola