கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு புரட்டாசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.


 


 




பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு புரட்டாசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு


 




இன்று சுவாமிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் வாராகி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்ட பிறகு சுவாமிக்கு உதிரிப்புக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.


 




கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு புரட்டாசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாகவும் ஆலய சிவாச்சாரியார் சார்பாக செய்தனர்.


 




 


இதேபோல் கரூர் நகரப் பகுதியில் உள்ள உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்திலும் வாராகி அம்மனுக்கு புரட்டாசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு மற்றும் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் நிரப்பித்த பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது.


 




 தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.கரூர் மாவட்டத்தில் பல்வேறு வராகி அம்மன் ஆலயங்களில் நடைபெற்ற வாராஹி அம்மன் பஞ்சமி திதி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.