கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.




ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு வாராகி அம்மன் ஆலயங்களில் இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மனுக்கு ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி




 


பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகபெடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று



அதன் தொடர்ச்சியாக வாராகி அம்மனுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.




கரூர் கற்பக விநாயகர் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு நடைபெற்ற ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி திதி அபிஷேக மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.




இந்த சிறப்பு நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் கார்த்திக் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார். அதை தொடர்ந்து அனைவருக்கும் உதிரிப்பூ மற்றும் விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டு ஆலய வாசலில் தீர்த்தம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.