கரூர் அருள்மிகு ஸ்ரீ குங்கும காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினார்.


 




 


கரூர் மாவட்டம், கொடையூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குங்கும காளியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷே விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்யேகமாக பிரம்மாண்ட யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் யாக வேள்வி நடத்தினர். 


 


 




அதில் மூன்று கால யாக வேள்வி நடைபெற்ற பிறகு யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித கலசத்திற்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டினார். தொடர்ந்து யாக சாலையில் இருந்து மேல தாளங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட காவிரி  புனித தீர்த்த குடத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு எடுத்து வந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து மூலவர் அருள்மிகு குங்கும காளியம்மன் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. 


 




அதை தொடர்ந்து கூடியிருந்த அனைத்து பக்தர்கள் மீதும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. மகா கும்பாபிஷே விழாவில் கரூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து வந்த 30-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்ட சுவாமி தரிசனம் செய்தனர்.