கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதி ஈஸ்வரர் ஆலயத்தில் கந்தசஷ்டி முன்னிட்டு  வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.


 




 


தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி கவச விழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி திருவீதி விழா நடைபெற்று வருகிறது. கல்யாண ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி உற்சவர் திருவீதி உலா ஆலயத்தில் இருந்து புறப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் சிவாச்சாரியார் பிரத்யேகமாக யாக வேள்வி நடத்தி அதை தொடர்ச்சியாக பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி திரு வீதி உலா வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


கந்த சஷ்டியை முன்னிட்டு தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகன்  சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.


 




 


கந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் கொடியேற்றத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் சுவாமிக்குகாலை 11.30 மணிக்கு கந்த சஷ்டி அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு பாலமுருகன் சுவாமிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பெடி, அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




 


அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கந்தசஷ்டி அபிஷேகம் மற்றும் அலங்காரத்தைக் காண ஏராளமான ஆன்மீக பெருமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் வசந்து சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.