Just In

தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி கோயிலில் வைகாசி பெருவிழா: பதுமை பூ போடும் நிகழ்ச்சி! பக்தர்கள் பரவசம்

தமிழகத்தில் எங்கும் காணப்படாத வினோத திருவிழா.. 3 லட்சம் தேங்காயை இடி, இடிப்பது போல உடைத்த பக்தர்கள் !

பக்தர்களே.. நாளை வைகாசி பெளர்ணமி! வீட்டில் பணக்கஷ்டம் தீர இதை மட்டும் செய்யுங்க..

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து சுவாமி தரிசனம்

தஞ்சாவூரில் 35 அடி உயர அரிவாள்: பிரமிப்பில் மக்கள்! தேரோட்டமும் தயார்!
தீயில் விழுந்த பெண்! சாதுர்யமாக காப்பாற்றிய பக்தர்கள் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி
Kanda Sasti 2024: கந்தசஷ்டி விழா; சிக்கல் சிங்காரவேலவர் ஆலய திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிங்காரவேலவருக்கு முத்து முத்தாக வியர்வை சிந்தும் காட்சி வேறு எங்கும் காண முடியாத அரிய காட்சியாகும்.
Continues below advertisement

சிக்கல் சிங்கார வேலவர் கோயில் தேரோட்டம்
நாகப்பட்டினம்: கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் ஆலய திருத்தேரோட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் குமரேசன் தேரினை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலர் ஆலயம் புகழ்பெற்ற முருகன் ஆலயமாகும். சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தான் முருகன் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தின் சூரசம்ஹார விழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் காலை நடைபெற்றது.
இதனையொட்டி இன்று காலை முருகபெருமானுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து முருகபெருமான் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது வாத்தியங்கள் முழங்க ஆலயத்தின் நான்கு ரதவீதிகளில் திருத்தேர் வலம் வந்து தேரோட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் குமரேசன் தொடங்கி வைத்த தேரோட்டத்தில் நாகை, கீழ்வேளுர், சிக்கல் மற்றும் சுற்று வட்டாரப் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இன்று இரவு நடைபெரும் சிக்கல் சிங்கார வேலவர் ஆலயத்தில் அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சூரனை சம்ஹாரம் செய்ய சிங்காரவேலவர் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. அப்போது சிங்காரவேலவருக்கு முத்து முத்தாக வியர்வை சிந்தும் காட்சி வேறு எங்கும் காண முடியாத அரிய காட்சியாகும். இவ்விழாவினை முன்னிட்டு நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
Continues below advertisement