காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ மூன்றாம் நாள் காலை உற்சவம். ஊதா நிற பட்டு உடுத்தி தங்க கருட  வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து காட்சியளித்த காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம்  கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை உற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, ஊதா நிற பட்டு உடுத்தி மல்லிகைப்பூ,செரனண்பகப்பூ மலர் மாலைகள், திருவாபரணங்கள் அணிவித்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.





பின்னர் மேளதாள, பேண்ட், வாத்தியங்கள், முழங்க, வேதப்பாராயண கோஷ்டியினர் பாடிவர, ஊதா நிற பட்டு உடுத்திய ஸ்ரீ வரதராஜ பெருமாள் தங்க கருட  வாகனத்தில், பாதம் தங்கிகள் தூக்கிச் செல்ல காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு வணங்கி வழிபட்டு சென்றனர்.

 



 

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் தலைமையில் ,ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழிநெடுகிலும்  பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

 



 


வைகாசி மாத பிரம்மோற்சவம் ( Vaikasi Brahmotsavam 2023 Dates )


ஜூன் இரண்டாம் தேதி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாள் காலை கருட சேவை (garuda seva) நடைபெறுகிறது. அன்று மாலை அனுமந்த் வாகனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.


பிரம்மோற்சவ விழாவில் நான்காம் நாள் காலை சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள் காட்சியளிக்கிறார். மாலை சந்திர பிரபை வாகனத்தில் காட்சியளிக்கிறார்.


ஜூன் நான்காம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாள். அதிகாலை தங்க பல்லாக்கு வாகனத்தில் (ஸ்ரீநாச்சியார் திருக்கோலம்) காட்சியளிக்கிறார். மாலை யாளி வாகனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.

















ஏழாம் நாள் திருத்தேர் ஸ்ரீ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருத்தேர் (kanchipuram vaikuntha perumal chariot ) எழுந்தருதல் மற்றும் திருத்தேரில் இருந்து எழுந்தருதல்  ஆகிய விழா நடைபெறுகிறது.


பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாள், திருபாதஞ்சாவடி திருமஞ்சனம் திருமண்காப்பு சேவை. மாலை குதிரை வாகனத்தில் காட்சியளிக்கிறார்


பிரம்மோற்சவ விழாவின் ஒன்பதாம் நாள் பல்லாக்கு, மட்டை அடி பிரம்மோற்சவம் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இரவு புண்ணியகோடி விமானத்தில் காட்சியளிக்கிறார்.


9ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரம்மோற்சவ விழாவில், பத்தாம் நாள் இரவு வெட்டிவேர் சப்பரம் காட்சியளிக்கிறார்.