அமெரிக்காவில் உள்ள கோவிலுக்கு கோவில் நகரமான காஞ்சியில் 75 நாட்களில் தயாரிக்கப்பட்ட தங்க தேர் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. 


 


 


 


கோயில் நகரம் காஞ்சிபுரம் 


 


 


காஞ்சிபுரம் கோயில் நகரமாக இருந்து வருகிறது. நகரங்களில் சிறந்த நகரமாகவும் காஞ்சிபுரம் இருந்து வருகிறது . காஞ்சிபுரத்தில் கோயில் சம்பந்தமான பொருட்கள் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. அதேபோன்று கோயில் சம்பந்தமான தொழில்களும் அதிகளவு வளர்ந்து வருகின்றனர். காஞ்சிபுரத்திலிருந்து அமெரிக்கா வாஷிங்டன் கோயிலுக்கு தங்கத்தேர் அனுப்பப்பட உள்ளது.


 




 


 


வாஷிங்டன் கோயில்


 


 


காஞ்சிபுரத்தில் ராஜா ஆன்மீக நிறுவனம் சார்பில் ஆன்மீகம் தொடர்பான பொருட்கள் தயார் செய்து கோவில் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் மாகாணத்தில் சியாடலில் உள்ள வேதா கோவிலுக்கான தங்க ரதம் ஆர்டர் பெறப்பட்டது.


 




சிறப்பம்சங்கள் என்ன ?


 


அதன்படி 23 அடி உயரத்தில் 4 டன் எடையில் இரும்பு மற்றும் தாமிர உலோகத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தங்க ரதம் 75 நாட்களில் செய்து முடிக்கப்பட்டது. 35 டிகிரி திரும்பும் அளவிற்கும் நவீன தொழில்நுட்பத்துடன் தயார் செய்யப்பட்ட இந்த ரதமானது ஒரே இடத்தில் நிற்காமல் 6 பாகங்களாக பிரித்தும் வைக்கும் அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது.




மேலும் சிவன், விஷ்ணு என எந்த கடவுளுக்கும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த தங்கரதத்தின் மதிப்பு 1.25 கோடி ரூபாய் ஆகும். இன்று தயாரித்து முடிக்கப்பட்ட இந்த தங்க ரதமானது 6 பாகங்களாக பிரிக்கப்பட்டு விமானம் மூலம் அமெரிக்கா சென்றடையவுள்ளது. தற்பொழுது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


 


 


 


இந்தத் தேர் வடிவமைத்தது குறித்து அதன் உரிமையாளர் நம்மிடம் கூறுகையில் , நீண்ட காலமாக எங்கள் நிறுவனம் கோயிலுக்கு தேவையான பல்வேறு பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறது. மரத்தேர் கோயிலுக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கோயில்களுக்கும் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் கோயில்களுக்கும் தயார் செய்து விற்பனை மேற்கொண்டு வருகிறோம். 


 


 


வகையில் வாஷிங்டன் பகுதியில் உள்ள தேவா கோயிலுக்கு தங்க தேர் தயாரிக்க வேண்டும் என எங்களிடம் கேட்டிருந்தார்கள். எனவே வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதால் நவீன முறையில் தேர் தயாரிக்க திட்டமிட்டோம். அந்த வகையில் தேர் தற்பொழுது தயார் செய்யப்பட்டுள்ளது . 6 பாகங்களாக தயாரிக்கப்பட்டு, முழு தேராக உருவாக்கப்பட்டுள்ளது. 75 நாட்களில் இந்த தேர் முழுமையாக தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வகைத் தேர் எளிதாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். ஒரே இடத்தில் தேர் நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. வேறு கோயில்களுக்கு கூட இந்த தேர் எளிதாக கொண்டு சென்று பயன்படுத்து கொள்ளலாம்.‌ சுமார் ஒரு கோடி 21 லட்ச ரூபாய் மதிப்பீடு இந்த தேர் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து கோயில்களுக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த தேர் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார் .