ஐப்பசி மாத  செவ்வாய்க்கிழமை ஒட்டி முருகர் கோவிலில் வெள்ளி ரத உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோயில் - kanchipuram kumarakottam temple


கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோவிலான புகழ்பெற்ற குமரக்கோட்டம் முருகன் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் இந்நிலையில் இன்று ஐப்பசி மாத செவ்வாய்க்கிழமை ஒட்டி முருகப்பெருமாள் வள்ளி, தேவயானை உடன் பச்சை மற்றும் நீல நிற பட்டு உடுத்தி பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



ஐப்பசி மாத செவ்வாய்க்கிழமை ஒட்டி முருகர் கோவிலில் வெள்ளி ரத உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


 


வெள்ளி ரத உற்சவம்


வெள்ளி ரத உச்சத்தில் எழுந்தருளிய முருகப் பெருமானுக்கு தீபாராதனை கட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகா முருகா என பக்தி பரவசத்துடன் தேரைவல பிடித்து இழுத்து கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். 


 



kanchipuram kumarakottam temple


வெள்ளி தேரில் பக்தருக்கு காட்சியளித்த முருகப்பெருமானை  கண்ட பக்த கோடிகள், அரோகரா அரோகரா என முழக்கமிட்டனர். வெள்ளி தேர்  பவனிக்கு  காஞ்சிபுரம் சுப்பிரமணி கோவில் நிர்வாகம் சார்பில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன


தல வரலாறு ( kanchipuram kumarakottam temple )


கோவில் நகரமாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம்  நகர் முழுவதும் நூற்றுக்கணக்கான கோவில்கள் நிறைந்திருக்கின்றன. பிரசித்தி பெற்ற சிவன் கோவில்கள் ,பிரசித்தி பெற்ற பெருமாள் ,கோவில்கள் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்கள் ஆகியவை காஞ்சிபுரம் நகர் முழுவதும் இருந்தாலும். தமிழ் கடவுளாக  விளங்கக்கூடிய  முருகனுக்கு இருக்கக்கூடிய பிரதான கோவில் குமரக்கோட்டம். 



ஐப்பசி மாத செவ்வாய்க்கிழமை ஒட்டி முருகர் கோவிலில் வெள்ளி ரத உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.



மூலவர் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி படைப்பு கோலமூர்த்தியாகக் காட்சி தருகிறார். பிரமனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியாதபோது அவனைக் குட்டிச் சிறையிலிட்டுப் பின்பு அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை தான் மேற்கொண்ட திருக்கோல காட்சி. முருகப்பெருமானை கவனியாது அலட்சியம் செய்த பிரமனிடம் தர்க்கம் (சண்டை) செய்ய; அவரிடமிருந்து உரிய பதில் வராததால் பிரமனை சிறைப் பிடிக்கிறார் முருகன். விடுவிக்க கோரி ஈசனின் கட்டளையை எடுத்துரைத்த நந்தி தேவனையும் திருப்பி அனுப்பி விடுகிறார். இறைவன் நேரில் சென்று எடுத்துரைத்து பிரமனை விடுவிக்க செய்கிறார். தந்தையின் கட்டளையை மீறியதற்கு பிராயச்சித்தம் வேண்டி சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். அச்சிவலிங்கமே தேவசேனாதீச்வரர் என்பது மூலத்தில் அறியப்பட்டது.



ஐப்பசி மாத செவ்வாய்க்கிழமை ஒட்டி முருகர் கோவிலில் வெள்ளி ரத உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.



 
பிரளய பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மார்க்கண்டேய முனிவர், திருமாலைக் கண்டு உலகத்து பொருட்களெல்லாம் எங்கே போயின என வினவ, எனது வயிற்றுக்குள் அடக்கம் என்று கூறிய திருமாலை இகழ்ந்தார் முனிவர் என்பது நம்பிக்கை. இதனால் மனம் வருந்திய திருமால் பிலாகாசத்து அன்னையை வழிபட்டு, பின்னர் இங்கு வந்து ஈசனருகில் சந்நிதி கொண்டார். என்றும் அன்புடயன் ஆனதால் உருகும் உள்ளத்தான் எனும் திருநாமம் கொண்டாரென்பது இத்தல வரலாறாக உள்ளது.