Kanchipuram Temple: புகழ்பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் கார்த்திகை மாத கடை ஞாயிறு திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. தலை சம்பந்தமான நோய்கள் தீர்க்க வேண்டி மண்டை விளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Continues below advertisement

கோவில் நகரம் காஞ்சிபுரம் - Temple City Kanchipuram 

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் விஷ்ணு பகவானாகிய பெருமாள் ஆமை உருவில் வந்து சிவபெருமானை வணங்கிய திருதலமாகவும் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்க்கும் பரிகாரத் தலமாகவும், விளங்கி வருவது காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

சிவபெருமானுக்கு உகந்த மாதமாகிய கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் கடை ஞாயிறு வழிபாடு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

Continues below advertisement

கடை ஞாயிறு திருவிழா 

அந்த வகையில், கார்த்திகை மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு வழிபாடு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடை ஞாயிறு உற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் சுற்று வட்டாரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலுக்கு வந்து தலை சம்பந்தமான காது, மூக்கு தொண்டை,கண் நோய்களை தீர்க்க வேண்டி மண்பாண்டத்தில் மாவு விளக்கு ஏற்றி தலையில் வைத்து கொண்டு கோவில் வளாகத்தில் சுற்றி வந்து கச்சபேஸ்வரர் சுவாமியை தரிசித்து, வணங்கி வழிபாடு செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.

கடை ஞாயிறு உற்சவத்தை ஒட்டி கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் - (Kanchipuram Kachabeswarar Temple )

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்  விளங்கி வருகிறது.  இந்தக் கோயில் "கச்சபேசம்" எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலைப்பற்றி காஞ்சிபுரம் புராணத்தில்  தனி படலமாக   அமையப்பெற்று இருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது . கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழில் இயற்றப்பட்ட தண்டியலங்காரம் என்ற இலக்கண நூலில் பாடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்  தல புராணம்

அமிர்தம் எடுப்பதற்காக,  பாற்கடலை  கடைந்த பொழுது  மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்திர மலை கடலில்,  மூழ்கிக் கொண்டிருந்தது. இதனால் அமிர்தம் கிடைக்காமல்  பணி தடைபடும் அபாயம் இருந்தது.  இதனால் மகாவிஷ்ணு  ஆமை   அவதாரம் எடுத்தார். மந்திர மலையை தாங்கி பிடித்து பணி நிறைவடைய உதவி புரிந்தார். இதனால் திருமாலுக்கு செருக்கு   உண்டாகியதாக கூறப்படுகிறது.  

உலகம் அழியும் வகையில் இதனால் உலகம் அழியும் வகையில், கடலை கலக்கியதால்  சிவபெருமான் கோபம் அடைந்துள்ளார். சிவபெருமான் ஆமை ஓட்டினை,  வென்டக மலையனிடையே  மறைத்து   வைத்துள்ளார் அதன் பிறகு,  தனது தவறை  உணர்ந்து. இதனை அடுத்து  திருமால்  ஆமை வடிவத்தில்  சிவனை வழிபட்டுள்ளார் என இக்கோவில் தலை புராணங்கள் கூறுகின்றன.