கரூர்  ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் நவகிரக குரு பகவானுக்கு குரு பெயர்ச்சி ஒட்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.


 




 


மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியை ஒட்டி பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்று வருகிறது. இதனுடைய பகுதியாக கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் நவகிரக குரு பகவானுக்கு குரு பெயர்ச்சி ஒட்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக நவகிரக குரு பகவான் உள்ளிட்ட அனைத்து நவக்கிரகங்களுக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்திய பிறகு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு தொடர்ச்சியாக உதிரிப்பூக்களால் ஆலயத்தில் சிவாச்சாரியார் நாமாவளிகள் கூறினார்.


 




 


தொடர்ந்து பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் உடன் நவகிரக குரு பகவானுக்கு சிறப்பு மகா தீபாராதனை கட்டப்பட்டது. கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவின் சிறப்பு அபிஷேகம் மற்றும் வெள்ளி கவச அலங்கார நிகழ்வை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கால பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம்.


 




 


தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பல்வேறு கால பைரவர் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கால பைரவருக்கு சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக காலபைரவருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து வடை மாலை சாற்றிய பிறகு சுவாமிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் தூப தீபங்கள் காட்டினார்.


 




 


தொடர்ந்து உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி பூஜையை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.