கரூர் எல்ஜிபி நகர் ஆஞ்சிநேயருக்கு அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.




கரூர் நகரப் பகுதியான எல்ஜிபி நகர் பகுதியில் குடிகொண்டு அருள்பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சிநேயருக்கு சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், அபிஷேக பொடி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


அதைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து வெண்ணெய் காப்பு சாத்தப்பட்டு, தொடர்ச்சியாக சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். 


தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.


கரூர் எல்ஜி பி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில்  ஆஞ்சநேயர் சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்


சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ கரூர் மாரியம்மன் ஆலயத்தில் தங்க தேரோட்டம்.




தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள்பாளித்து வரும் கரூர் மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் மாரியம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக தங்கத்தேரில் சுவாமியை கொலுவிற்கு செய்தனர்.


ஆலய மண்டபத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க புறப்பட்ட தங்க தேரோட்ட திருவீதி உலா ஆலயம் வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது கரூர் மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற தங்க தேரோட்ட நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.





கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ காயத்ரி தேவிக்கு சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


அதைத்தொடர்ந்து காயத்ரி தேவிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து தொடர்ச்சியாக உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார்.


பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.


விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத அமாவாசையின் சிறப்பு ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பாக செய்திருந்தார். சித்திரை மாத அமாவாசை விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.