காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்துள்ள ஐயங்கார்குளம் பகுதியில், சஞ்சீவிராயர் கோவில் அமைந்துள்ளது. சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகே,  உள்ள பெரிய குளத்தின்,  விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அறியப்படும், 14ம் நூற்றண்டு காலத்து நடவாவிக் கிணறு என்ற சிறப்பு வாய்ந்த கிணறு ஒன்று உள்ளது.



 

"நடவாவி"

 

நடவாவி என்றால் படிக்கட்டுள்ள கிணறு என்று அர்த்தம். இந்தக் கிணற்றுக்கு செல்ல தரை மட்டத்தில் இருந்து படிக்கட்டுடன் கூடிய சுரங்கம் போன்ற பாதை உள்ளது. அந்தப் பாதையில் இறங்கிச் சென்றால் கருங்கல்லால் ஆன அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபத்தைக் காணலாம். இது ஓர் அபூர்வ கட்டிட அமைப்பு என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்ற நிலையில் தரைமட்டத்தில் இருந்து கீழே செல்ல 48 படிகள் உள்ளன. இதில் 27 படிகளைக் கடந்தால் அந்த 16 கால் மண்டபத்தை நாம் அடைய முடியும். 



சித்ரா பௌர்ணமி

 

மேலும் இந்தக் கிணற்றுக்குள் செல்ல  அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் வழியாகக் கீழே சென்றால்  எப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படும் இந்த நடவாவிக்கிணற்றிலுள்ள, பெரிய கிணற்றில் வருடந்தோறும் சித்ரா பௌர்ணமி அன்று ஒருநாள் மட்டுமே  உள்ளிருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றப்பட்டு, அன்று மாலை பூமிக்கு அடியில் கிணறு அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் உலக பிரசித்திப்பெற்ற காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமானை எழுந்தருளப் செய்வார்கள். அதன் பின் மறுநாள் மாலையில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரையும் அந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அப்போது இரண்டு நாட்கள் மட்டும் பூமிக்கு அடியில் கிணற்றுக்குள் சுவாமிகளைத் தரிசிக்கலாம். அதன்பின் கிணற்றில் நீர் ஊற்றுப் பெருக்கெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நிரப்பிவிடும். 

 



நிரம்பிய நடவாவி கிணறு

 

குறிப்பாக இந்த நடவாவிக்கிணறு வான்வழி பார்வையில் இந்த கிணறு சாவி போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது மாண்டஸ் புயல் மற்றும் வடக்கிழக்கு பருவமழையை யொட்டி பெய்த தொடர் கன மழையின் காரணமாக இந்த நடவாவிக்கிணறு முற்றிலுமாக மழை நீரால் நிரம்பி பார்ப்பதற்கு மிக ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

 

தற்போது நடவாவிக்கிணற்றுக்கு செல்லும் படிக்கட்டுகளில் நான்கு படிக்கட்டுகள் மட்டுமே நீரில்லாமல் வெளியே தெரிகிறது. மீதமுள்ள அனைத்து படிக்கட்டுகளும் முழுவதுமாக நீர் நிரம்பி காணப்படுகிறது.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண