ஆடி பௌர்ணமி; கரூரில் பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாத பௌர்ணமி பூஜையை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Continues below advertisement

கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

Continues below advertisement


ஆடி பௌர்ணமி முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற  நிலையில் உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு ஆடி பௌர்ணமி முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக வாராகி அம்மனுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

 


கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாத பௌர்ணமி பூஜையை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ அஷ்ட புஜ ஐஸ்வர்ய ஜெயதுர்க அம்மன் ஆலயத்தில் ஆடி பௌர்ணமி முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை.

 


ஆடி பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் வெண்ணமலை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ அஷ்ட புஜ ஐஸ்வரிய ஜெய துர்க்கை அம்பிகை ஆலயத்தில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் ஜெயதுர்க்கைக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய்,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஜெயதுர்க்கை அம்பிகைக்கு 9 கலசங்களால் ஆன தீர்த்தத்தை பக்தர்கள் ஆலயம் வலம் வந்த பிறகு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 


அதை தொடர்ந்து ஜெயதுர்க்கை அம்பிகைக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் பல்வேறு சோடச்ச உபச்சாரங்கள் நடைபெற்று தொடர்ச்சியாக பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

 

 



பின்னர் அனைவருக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு விபூதி உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ அஷ்டபுஜ ஐஸ்வர்ய ஜெயதுர்க்கை அம்பிகை ஆலயத்தில் நடைபெற்ற ஆடி பௌர்ணமி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola