விநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்


கரூர் நகரப் பகுதியில் உள்ள எல்.ஜி.பி நகர் அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு ஐப்பசி மாதத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.




 


அதைத் தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. எல்.ஜி.பி நகர் ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத துர்க்கை அம்மன் சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


ஓலை சுவடிகளில் ரசாயனக் கலவை பூசும் பணி.


கரூர் அருகே சிவபுரீஸ்வரர் கோயிலில் அழியும் தருவாயில் இருந்த 25 ஆயிரம் சுருனை ஓலை சுவடிகளை தொகுத்து, ரசாயனக் கலவை பூசும் பணியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன குழுவினர் ஈடுபட்டிருந்தனர். குளித்தலை அருகே உள்ள சிவாலயத்தில் ஆயிரத்து, 400 ஆண்டுகள் பழமையான சிவபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பெரியநாயகி உடலுறை சிவபுரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவில் பிரதோஷத்திற்கென்றே கட்டப்பட்டதாகும். பாடல் பெற்ற இக்கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது.  பழமையும், பெருமையும் வாய்ந்த இக்கோயிலில் சமீபத்தில் சுமார் 25, ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சுருள் ஓலைசுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அக்கோவிலில் வைக்கப்பட்டிருந்தது .




 


மிகப் பழமையான கோயில்களில் உள்ள ஓலைச்சுவடிகளை ஒன்று திரட்டி அவற்றின் வரலாற்று உண்மைகளை அறிய குழு அமைக்க உத்தரவிட்டிருந்து. இதனை அடுத்து, இந்து அறநிலை துறை சார்பில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் இலக்கிய  சுவடிகள் புலம் துறையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.




இக்குழுவில் உள்ள ஆறு பேர்  கொண்ட குழு கோவிலில் இருந்த சுருள் ஓலை சுவடிகளை ஒன்று திரட்டி,  இதனை சுத்தம் செய்து,  ரசாயன கலவைகள் பூசி,  தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  பின்னர் அவற்றில் உள்ள வரலாற்றுப் பதிவுகள் கணினி மூலம் பதிவிறக்கம் செய்யவும்  திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அவ்வாறு கணினி  மயமாக்கும் பட்சத்தில், கோவில் வரலாறு, பூஜைகள், இலக்கியங்கள் உள்ளிட்ட வரலாற்று பதிவுகளை அனைவரும் அறிய முடியும் கூறப்படுகிறது.