CSK pics: சூரத் விரைந்த ஜடேஜா... ஐபிஎல் பயிற்சி ஆரம்பம்!
2022 ஐபிஎல் தொடர் நெருங்குவதையொட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சூரத்தில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன.
தீவிரமாக பயிற்சி எடுத்து கொண்டு வரும் சென்னை அணி வீரர்கள், இந்த முறையும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குவார்கள் என தெரிகிறது.
கிரிக்கெட்டையும் தாண்டி மற்ற விளையாட்டுகள்
இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஜடேஜா, சென்னை அணியுடன் இணைந்திருக்கிறார்
மேலும் காயம் காரணமாக பயிற்சியில் கலந்து கொள்ளாத ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் சாஹர் உடற்தகுதி மேம்படுத்தல்களுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புவார்கள் எனவும் அவர்களுக்காக நிர்வாகம் இன்னும் காத்திருப்பதாகவும் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.