LPL: அழையா விருந்தாளியாக மைதானத்துக்கு வந்து ரசிகர்களுடன் விளையாட்டை பார்த்து ரசித்த பாம்பு!
ஸ்ரீஹர்சக்தி | 01 Aug 2023 08:22 PM (IST)
1
இந்தியாவில் ஐ.பி.எல். போட்டித்தொடர் நடத்தப்பட்டது போல், ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு பெயர்களில் டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
2
இலங்கையில் தி லங்கா பிரீமியர் லீக் என்ற பெயரில் டி20 போட்டி தற்போது தொடங்கியுள்ளது.
3
இலங்கையில் உள்ள கொழும்புவில் பிரேமதாசா மைதானத்தில் காலே டைட்டன்ஸ் – தம்புல்லா ஆரா அணிகள் நேருக்கு நேர் மோதின.
4
முதலில் களமிறங்கிய காலே டைட்டன்ஸ் சிறப்பாக ஆடி 180 ரன்கள் எடுத்தது. தம்புல்லா ஆரா அணி 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
5
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அழையா விருந்தாளியாக மைதானத்துக்கு வந்து ரசிகர்களுடன் விளையாட்டை பார்த்து ரசித்தது பாம்பு.
6
இதனால் ஆட்டம் சற்று நேரம் நிறுத்தப்பட்டு பாம்பை அகற்றிய பின்னர் தொடங்கப்பட்டது.