செல்வம் செழிக்க, லட்சுமி கடாட்சம் உண்டாக தினமும் அரிசி மாவு கோலம் போடுங்க!
தனுஷ்யா | 30 Sep 2023 11:37 AM (IST)
1
நம் முன்னோர்கள் வீட்டின் வாசலை கூட்டி, சாணம் தெளித்து, கோலம் போடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
2
இப்போதெல்லாம் ஒரு சில கிராமங்களில் மட்டும்தான் இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
3
நகரங்களை பொறுத்தவரை, கல்யாண வீட்டிலும், விழா காலங்களிலும் மட்டும்தான் கோலத்தை பார்க்கமுடியும்.
4
கோலம் என்பது வழிபாட்டு முறைகளுள் ஒன்று. நாள்தோறும் கோலமிட்டால் நம் இல்லத்தில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சம் பொங்கும் என நம்பப்படுகிறது. அத்துடன் துர்சக்திகள் வீட்டை அண்டவே அண்டாதாம்.
5
அரிசிமாவினால் கோலமிடுவது சில உயிர்களுக்கு உணவாக இருப்பதால் அன்னதானம் செய்த பலனும் கிடைக்குமாம்.
6
அத்துடன், குணிந்து நிமிர்ந்து கோலமிடுவது ஒரு வகையான உடற்பயிற்சிதான். போர் அடிக்கும் எண்ணம் காற்றில் பறந்துவிடும், மனம் புத்துணர்ச்சியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.