Thaipusam 2025: முருகனுக்கு அரோகரா... முதல்படை வீட்டில் பரவசத்துடன் சாமியை தரிசித்த பக்தர்கள்
தைப்பூசத் திருநாள் பழனியில் தான் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் என்றாலும், முருகனின் அறுபடை வீடுகளாக முதல் படை வீடனா திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத் திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமிக்கு வேல் குத்தி வந்த பக்தர்.
கூடுதல் பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தற்போது திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர் மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சாமிக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிருதம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாலை முதல் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.