Thanjavur Big Temple : தஞ்சாவூர் பெரிய கோயிலில் மகா சிவராத்திரி விழாவை ஒட்டி குவிந்த பொதுமக்கள்!
Thanjavur Big Temple : பிரதோஷத்தை ஒட்டி நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது.
Continues below advertisement

தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷ வழிபாடு
Continues below advertisement
1/6

தமிழ்நாட்டில் உள்ள மிகவும் முக்கியமான சிவ ஸ்தலமாக தஞ்சை பெரிய கோயில் விளங்குகிறது. பெரிய கோபுரம், பெரிய லிங்கம், பெரிய நந்தி என மிகவும் பிரம்மாண்டமாக காணப்படும் இக்கோவில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
2/6
1000 ஆண்டுகளை தாண்டியும், தஞ்சாவூர் மண்ணில் கம்பீரமாக நிற்கும் இந்த கோயில் அந்த ஊரின் அடையாளமாகவே இருக்கிறது.
3/6
ஆன்மிக ஸ்தலமாகவும் சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்கும் இந்த இடத்தில் தினந்தோறும் மக்கள் கூட்டம் குவியும்
4/6
ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷம், சிவராத்திரி நாட்களில் இக்கோயில் விசேஷமாக காணப்படும்.
5/6
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டின் மகாசிவராத்திரி நேற்று (மார்ச் 8) கொண்டாடப்பட்டது. ஒரே நாளில் சிவராத்திரியும் மாத பிரதோஷமும் வந்ததால் தஞ்சை கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது.
Continues below advertisement
6/6
பிரதோஷத்தை ஒட்டி நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பால் அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் உள்ளிட்டவை செய்யப்பட்டது.
Published at : 09 Mar 2024 08:53 AM (IST)