✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Pongal 2024 : காணும் பொங்கலையொட்டி தூத்துக்குடியில் அலை கடலென திரண்ட மக்கள்!

தனுஷ்யா   |  17 Jan 2024 03:30 PM (IST)
1

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நினைவு கோட்டைக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்றும் இன்றும் வந்து செல்லக்கூடிய சுற்றுலாப் பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். 

2

சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக மாவட்ட சுற்றுலாத்துறை,  பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாவட்ட இசை பள்ளி  மாணவ மாணவியர்களின் ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 

3

காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நினைவு கோட்டை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமானது திருவிழா போல் காட்சி அளித்தது.  

4

அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

5

தை மாதப்பிறப்பை முன்னிட்டு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

6

பின்னர் உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனையும் நடந்தது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற காலங்கள் தொடர்ந்து நடந்தது.

7

அதேபோல், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதிகாலை 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனையும் நடந்தது.

8

மாலையில், சுவாமி அலைவாயுகந்தபெருமான் பரிவேட்டைக்காக வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

9

அங்கு நடந்த பரிவேட்டை வேட்டை நிகழ்ச்சிக்கு பின்னர், சுவாமி ரதவீதி சுற்றி சன்னதித்தெரு வழியாக கோயிலை சேர்ந்தார். நேற்று திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • தூத்துக்குடி
  • Pongal 2024 : காணும் பொங்கலையொட்டி தூத்துக்குடியில் அலை கடலென திரண்ட மக்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.