Uttarkhand Tunnel Rescue: வெற்றி..வெற்றி..சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் மீட்பு..!
சுபா துரை | 28 Nov 2023 09:23 PM (IST)

உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு
1
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மலைப்பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வந்தது.
2
பணிகள் முடிவடையும் வேளையில் ஒரு பகுதி இடிந்து விழுந்து மணல் சரிவு ஏற்பட்டது.
3
அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்களும் சுரங்கத்தில் சிக்கி கொண்டனர்.
4
உள்ளே சிக்கிக்கொண்ட தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் உணவு, மருந்து மற்றும் தேவையான பொருட்களும் அனுப்பபட்டன.
5
கடந்த 17 நாட்களாக தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
6
இந்நிலையில் இன்று 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.