Mahakumbh 2025: புனித நீராடிய ஏராளமான பக்தர்கள் - மகா கும்பமேள புகைப்படங்கள்!
உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பாரதத்தின் மாண்புகளையும், கலாச்சாரத்தையும் போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது மிகவும் சிறப்பான நாள் என குறிப்பிட்டுள்ள மோடி, மகா கும்பமேளா, இந்தியாவின் காலம் கடந்த ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியுள்ளது என்றும் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுகிறது என்றும் கூறியுள்ளார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிரயாக்ராஜில் தொடங்கியுள்ள மகா கும்பமேளா, வரும் பிப்ரவரி 26ஆம் தேதி, புதன்கிழமை வரை தொடரும். வரலாற்று ரீதியாக, கும்பமேளா புனித நீரில் நீராடுவதுடன், பாவங்களைப் போக்குவதற்கும், மோட்சத்திற்கான (விடுதலை) பாதையில் இறங்குவதற்கும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
உத்தரபிரதேச காவல்துறை 2,700 AI-செயல்படுத்தப்பட்ட கேமராக்களை நிறுவியுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்த நீருக்கடியில் ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது. மேலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஏழு அடுக்கு பாதுகாப்பு வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
திரிவேணி சங்கமத்தில் பல லட்சகணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.