காணும் பொங்கல் கொண்டாட்டம்; கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
பிரசாந்த் | 18 Jan 2024 11:11 AM (IST)
1
காணும் பொங்கல் தினத்தில் உறவினர்கள், நண்பர்களை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
2
காணும் பொங்கல் தினமான இன்று ஏராளமான மக்கள் சுற்றுலா தலங்களில் குவிந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
3
சிறுவாணி மலைத் தொடர்களின் அடிவாரத்தில், வனப்பகுதிக்குள் கோவை குற்றாலம் அமைந்துள்ளது.
4
இயற்கை சூழலை ரசிக்கவும், அருவிகளில் குளிக்கவும் மக்கள் படையெடுத்து வந்தனர்.
5
ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளில் மக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
6
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து கொட்டும் அருவிகளில் குடும்பத்தோடு குளித்து மகிழ ஏற்ற இடமாக உள்ளது.
7
கோவை நகரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவை குற்றாலம்.
8
கோவை குற்றாலம், முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
9
ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.