Chettinad Keera Kootu Recipe : கீரையை இப்படி செஞ்சு கொடுங்க..குழந்தைகள் மறுக்காம சாப்பிடுவார்கள்!
தேவையான பொருட்கள் : பாசி பருப்பு - 1/2 கப், தண்ணீர், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, பசலைக் கீரை - 1 கட்டு, எண்ணெய் - 2 தேக்கரண்டி, சின்ன வெங்காயம் - 10 நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 கீறியது, உப்பு - 1 தேக்கரண்டி, நெய் - 2 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி, கடுகு - 1/4 தேக்கரண்டி, பூண்டு - 2 பல் தட்டியது, காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி.
செய்முறை : முதலில் பிரஷர் குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். பசலைக் கீரையை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கிய பின் பசலைக் கீரையை சேர்த்து கிளறவும். 2 நிமிடங்கள் வதங்கியபின் உப்பு சேர்த்துக் கிளறி வேக வைத்த பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
கடாயை மூடி 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
தாளிப்பு கரண்டியில் நெய், உளுந்து, கடுகு, தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்து கீரை கூட்டின் மேல் போடவும்.