Chettinad Mushroom Biryani: சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி எளிதாக செய்யலாம் - ரெசிபி!
காளானை நன்றாக கழுவி எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம், பாசுமதி அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் சேர்த்து, சூடானதும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் இலவங்கம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
இதில் நறுகிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும், இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா உள்ளிட்டவற்றையும் சேர்த்து, வதக்க வேண்டும்
அதோடு இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி ஆகியவற்றையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
தக்காளி நன்கு வதங்கியதும், காளானை சேர்த்து பிரட்ட வேண்டும்
அதனுடன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி, சோம்பு பொடி, தயிர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிரேவி போன்று வரும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து அதில் ஊறவைத்த பாசுமதி அரிசியைக் கழுவி சேர்த்து, அதனுடன் 3 கப் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்ட பின் இறக்க வேண்டும்.
இப்போது சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி தயார். ( பாசுமதி அரிசி விரைவில் வேக கூடியதாக இருந்தால் இரண்டு விசில் போதுமானது)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -