Paneer Peas: சப்பாத்திக்கு பெஸ்ட் காம்போ! பனீர் பட்டாணி கிரேவி செய்முறை இதோ!
பன்னீரை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளி வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், நறுக்கிய பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே கடாயில் கிராம்பு, சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அனைத்தும் நன்கு வதங்கியதும், அதில் பச்சை பட்டாணியை சேர்த்து, தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
பட்டாணியானது நன்கு வெந்ததும், அதில் பன்னீரை சேர்த்து கிளறி, 5 நிமிடம் மூடி வைத்து இறக்கும் போது கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சுவையான பட்டாணி பன்னீர் கிரேவி ரெடி.