Mango Pickle: பத்தே நிமிஷம்தான்! ஈசியா செய்யலாம்! நாவில் எச்சில் ஊறும் மாங்காய் ஊறுகாய்!
ஜான்சி ராணி | 16 Jan 2024 01:47 PM (IST)
1
மாங்காயை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து, ஒரு மணி நேரம் உலர்த்தி வைக்க வேண்டும். பின்னர் மாங்காய் துண்டுகளில் கல் உப்பை போட்டு நன்றாக குலுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
2
வறுத்த வெந்தயம் மற்றும் கடுகை பொடியாக மிக்சியில் அரைத்து எடுத்தும் மாங்காயில் தூவி கிளறி விட வேண்டும்.
3
காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் மற்றும் பெருங்காயப்பொடி கலந்து நன்றாக குலுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
4
கடாயில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து சூடாக எடுத்து மாங்காயில் ஊற்றி நன்றாக கிளறி விட வேண்டும்.
5
இந்த மாங்காய் ஊறுகாயை இரண்டு நாட்களுக்கு பிறகு எடுத்து பார்த்தால் எண்ணெய் தனியாக பிரிந்து மாங்காயில் மிளகாய் காரம் இறங்கி சுவையாக இருக்கும்.
6
ஊறுகாயை ஓராண்டு ஆனாமல் கண்ணாடி பாட்டிலில் வைத்து பயன்படுத்தலாம்.