Skincare Routine : முகத்தில் மேக் கப் போடுவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?..சில டிப்ஸ் இங்கே!
பொதுவாக மேக்கப் போட்டுக் கொள்வதற்கும், அதற்கான பொருட்கள் மீதும் பெண்களுக்கு ஆர்வம் இருக்கும்
மேக்கப் போடுக் கொள்வதற்கான புரிதல் பலருக்கு கிடையாது என்பதே நிதர்சனம். எந்த புரிதலும் இல்லாமல் மேக்கப் போட்டு முகத்தின் அழகை பாழாக்கி விடுகின்றனர்
மெக் போடுவதற்கு முன்பு, சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். எப்போதும் மேக்கப் போடுவதற்கு முன்பு க்ளென்சரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
பின்பு, சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் முகம் மென்மையாக இருக்கும்
பின்னர், சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மூலம் முகத்தில் இருந்து வழியும் எண்ணெய் கட்டுப்படுத்தப்படும்.
இன்றைய காலத்தில் ஒருவர் மேக்கப் போடும்போது, தனது முகத்தில் நீண்ட நேரம் அது இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். பிரைமரை பயன்படுத்தினால் மேக்கப் அதிக நேரம் முகத்தில் கலையாமல் இருக்கும்.
இதற்கு பின்பு, அவரவர்களின் முகத்தின் நிறத்திற்கு ஏற்றவாரு பவுன்டேஷன், காம்பாக்ட் பவுடர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மேக்கப் போட வேண்டும்.