Peerkangai Kootu : சாம்பார் சலித்துவிட்டதா? பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு செய்து சாப்பிடுங்க!
தேவையான பொருட்கள் : எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, வெங்காயம் - 1 நறுக்கியது , பச்சை மிளகாய் - 5 கீறியது, பூண்டு - 5 பற்கள்
ஊறவைத்த கடலை பருப்பு - சின்ன கப் , உப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி, தண்ணீர் - 1 கப், பீர்க்கங்காய் - 2 , மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, தனியாதூள் - 1 தேக்கரண்டி , கறிவேப்பிலை , கொத்தமல்லி இலை நறுக்கியது.
செய்முறை: முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்தது பெருங்காய தூள், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து, தண்ணீரில் ஊறவைத்த கடலை பருப்பை சேர்க்கவும். அதன்பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அனைத்தையும் கலந்துவிட்டு கடாயை மூடி வைக்கவும்.
பத்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேக வைக்கவும். அதன்பிறகு பீர்க்கங்காயை சேர்த்து கிளறிவிட்டு மிளகாய் தூள், தனியா தூள், கறிவேப்பிலை சேர்த்து கிளறிவிட்டு மீண்டும் கடாயை மூடி, ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.
ஐந்து நிமிடத்திற்கு பிறகு நறுக்கிய கொத்தமல்லி தூவி அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு தயார்.