Cooking Tips : எதுல செய்தாலும் சரி.. குருமா கமகமன்னு இருக்க இதை சேர்த்தால் போதும்!
தனுஷ்யா | 16 Aug 2024 01:15 PM (IST)
1
குருமா வகைகளை செய்யும் போது, வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால் குருமா மணமாகவும் சுவையாகவும் இருக்கும்
2
பூண்டுடன் சிறிது கேழ்வரகு சேர்த்து வைத்தால் பூண்டு நீண்ட நாட்களுக்கு பழுக்காமல் இருக்கும்
3
சாதம் வடிக்கும் போது சற்று குழைந்து விட்டது போல் தெரிந்தால் உடனே சிறிதளவு நல்ல்லெண்ணெய் சேர்த்தால் சாதம் மேலும் குழையாமல் இருக்கும்
4
உளுந்தவடைக்கு மாவு ஆட்டும் போது சிறிதளவு கொஞ்சம் கொத்தமல்லி, புதினா, இஞ்சி சேர்த்து ஆட்டினால் வடை சுவையாகவும் மணமாகவும் இருக்கும்
5
கத்திரிக்காய் பொரியல், கூட்டு செய்யும் போது, அதில் கொஞ்சம் கடலை மாவு தூவி இறக்கினால் சுவை கூடுதலாக இருக்கும்