E- Cigarette : இ - சிகரட் நல்லதா? கெட்டதா? ஆய்வுகள் தெரிவிப்பது என்ன?
சாதாரண சிகரெட்டில் புகையிலையை பற்றவைத்து பஞ்சின் வழியாக புகைப்பிடிப்பார்கள். இ- சிகரெட்டில் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இதன் உள்ளே இருக்கும் நிக்கோட்டின் தண்ணீர் போன்று இருக்கும், பாட்டரியில் வரும் தீயின் மூலம் நிக்கோட்டின் சூடாகி புகையாக வெளியே வரும்.
சாதாரண சிகரெட்டில் எந்த அளவிற்கு ஆபத்து உள்ளதோ அதே அளவிற்கு இ சிகரெட்டிலும் ஆபத்து உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதிகப்படியாக இ- சிகரெட் புகைக்கும் போது இருமல், நெஞ்செரிச்சல், வைரல் தொற்று, நுரையீரல் கோளாறு, இரத்த வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்
இ - சிகரட் பிடிப்பவர்களில் மூன்றின் ஒரு பங்கு மக்களுக்கு நுரையீரல் முழுமையாக செயலிழந்து போய் விடலாம் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன
பெரும்பாலும் இ- சிகரெட்டை 35 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே அதிகப்படியாக பயன்படுத்தி வருகின்றனர்
இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, இ- சிகரெட் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.