Giloy Benefits : சோமவல்லி என்னும் சீந்தில் செடி… நீரிழிவு நோயில் இருந்து இதய ஆரோக்கியம் வரை அத்தனையும் நன்மைகள்..
கிலோய் (Giloy) என்று ஆங்கிலத்தில் பெயர்கொண்ட இந்த படரும் கொடியை தமிழில் சீந்தில் என்றும் அமிர்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க மூலிகையாகும்.
இந்த ஆயுர்வேதச் செடியை உங்கள் உணவு முறைகளில் சேர்த்துக்கொள்வது, உங்கள் உடல்நலத்திற்கு பெரிய பங்களிப்பை அளிக்கும்.
இதனை தூளாகவும், சாறாக பிழிந்தும், காப்ஸ்யூல்களாகவும் உட்கொள்ளலாம். இதன் முக்கியமான 5 ஆரோக்கிய நன்மைகளை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
உணவில் சீந்திலை சேர்த்துக்கொள்வது அல்லது அதன் சாற்றை உட்கொள்வது, தங்கள் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
சீந்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.தோல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதோடு கல்லீரல், சிறுநீர் பாதை மற்றும் இதய பிரச்சனைகளை நிவர்த்தி செய்கிறது.
சீந்தில் என்பது அழற்சி எதிர்ப்பு மற்றும் மூட்டுவலி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த மூலிகையாகும். இது மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு மூட்டுவலி அறிகுறிகளையும் குறைக்கிறது.