ஆபாசம் இல்லாத அழகியலுக்கு சொந்தக்காரர்..கவிஞர் தாமரையின் சிறந்த வரிகள்!
காதலிப்பவர்கள் இருவர் அனால் அவர்களின் உயிர் ஒன்று என்பதை குறிக்கும் வரிகள் 'நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்… உன் தயவால் தானே… ஏங்குகிறேன் தேங்குகிறேன்… உன் நினைவால் நானே நான்…'
பார்த்தவுடன் காதல் வரும் என்பதை உணர்த்தும் தாமரையின் வரிகள் 'சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன் அங்கே தொலைந்தவன் நானே'
காதலிப்பவர்களுக்கு நேரமில்லை என்பதை விளக்கும் வரிகள் 'இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா'
காதலி உடனான உரையாடல் சலிக்காது என்பதை விவரிக்கும் வரிகள் 'உலகத்தின் கடைசி நாள் இன்றுதானா என்பது போல் பேசிப்பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே '
எதிர்பாராத நேரத்தில் வரும் காதலை விளக்கும் வரிகள் 'கண்களில் ஏக்கம்.. காதலின் மயக்கம்.. ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்.. '
காதலர்கள் பிரிவுக்கு பின்னும் நினைப்பதை சொல்லும் வரிகள் 'மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என்அன்பு ஒருபோதும் பொய்யில்லையே'