World Music Day : அன்றும்..இன்றும்..என்றும்.. உங்கள் இளையராஜா!
இளையராஜாவுடன் வேலை செய்த அத்தனை இயக்குநர்களும், ராஜா தனது இசை குறிப்புகளை கைகளால் எழுதுகிறார் என கூறியுள்ளனர்.
ஒருவரிடம் அதிக அனுபவங்கள் இருக்கிறதென்றால் அந்த அளவிற்கு அவர் தனது தொழிலில் உழைத்திருக்கிறார் என்று அர்த்தம். அந்த வகையில் இளையராஜா உழைத்தது அதிகம்.
இளையராஜாவிடம் இருந்த மற்றொரு ஆற்றல் காலத்திற்கேற்ப மாறுவதுதான். அன்னக்கிளியில் தொடங்கிய பயணம் மார்டன் லவ் ஸ்டோரியில் அவர் பாடிய ‘தென்றல் இனிது’ வரை நீடித்து வருகிறது.
இன்று இருக்கும் இசையமைப்பாளர்களில் பலர் முறையாக பயிற்சி பெறாதவர்களே ஆனால் அதுவும் பெரிய குற்றம் இல்லை.
ஆனால் இளையராஜாவின் எல்லா இசையும் ஏதோ ஒருவகையில் கர்நாடக இசையில் ஒரு அம்சத்தைக் கொண்டிருக்கிறது. கர்நாடக இசையை அனைத்துத் தரப்பு மக்களுக்கு கொண்டு சேர்த்தவரும் இளையராஜாதான்.
எந்த ஒரு நபர் காலத்தில் நீடித்து மனிதர்களின் மனதிடம் தன்னை ஒரு நினைவாக பதிக்கிறாரோ அவரே இசைமேதை.அவரே கலைஞர். அவரே இசைஞானி இளையராஜா.