KPY Bala : கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக்கொடுத்த KPY பாலாவிற்கு குவியும் வாழ்த்துகள்!

KPY பாலா
தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ஃபேமஸ் ஆனவர் KPY பாலா. அதனை தொடர்ந்து கலக்கல் சாம்பியன்ஸ் மற்றும் இதர ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.
குக் வித் கோமாளியிலும் உடனுக்குடன் கவுண்டர் கொடுத்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து கலக்கினார்.
இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகளும் கிடைத்தது. ஜூங்கா, தும்பா, தேஜாவு, ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கலக்கும் பாலா, தொடர்ந்து பல சமூக சேவைகளை செய்து வருகிறார். இவரின் பெயரில் மக்கள் சேவைக்காக நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஓடி வருகிறது
தற்போது, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவரண தொகை வழங்கியுள்ளார். தன்னிடம் இருந்த 2 லட்ச ரூபாயை இதற்காக பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ‘என்ன வாழ வைத்த சென்னைக்கு என்னால் முடிந்த உதவி. 2015ல் மழை வந்த போது செய்யணும்னு ஆசை இருந்தது ஆனா அப்போ காசு இல்ல. அதனால் தான் இப்போ என் அக்கவுண்டில் இருந்த சுமார் 2.15 லட்ச ரூபாயை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1000ரூ கொடுத்து இருக்கிறேன்’என கூறினார்.
குழந்தைகளின் படிப்புக்கு உதவி, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி, நலிந்த கலைஞர்களுக்கு உதவி என்று செய்து வரும் KPY பாலா, தற்போது செய்துள்ள இந்த உதவியும் மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.