Kantara 2 : ‘வராஹ ரூபம்..’ காந்தாரா 2 குறித்த அப்டேட் கொடுத்த ரிஷப்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் காந்தரா. இப்படம் கன்னட மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
20 கோடி முதலீட்டில் உருவான காந்தாரா 450 கோடி வசூலை ஈட்டி திரையுலகினரை ஆச்சரியத்தில் முழ்கடித்தது.
கர்நாடக மக்களின் வழிபாட்டு முறைகளை குறித்து பேசிய இப்படம் பலரின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளி்யாகும் என்று படக்குழு தெரிவித்திருந்த நிலையில் தற்போது இது குறித்து ரிஷப் ஷெட்டி புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
யுகாதி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த ரிஷப் ஷெட்டி, காந்தரா 2 குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார்.
காந்தாராவின் ப்ரிகுவல் படமான காந்தரா 2 விற்கான ஆராய்ச்சி வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் அதற்கான கதை எழுதும் பணிகள் தொடங்கிவிட்டதாக அப்டேட் கொடுத்துள்ளார் ரிஷப் ஷெட்டி. இதனால் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.