Kalakshetra: கலாக்ஷேத்ரா விவகாரம் குறித்து கருத்து கூறிய அபிராமி..பதிலடி கொடுத்த சின்மயி!
நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து பிரபலமானவர், அபிராமி. தற்போது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கலாக்ஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவர் இவர்.
காலாக்ஷேத்ரா விவகாரம் குறித்து, நடிகை அபிராமி சமீபத்தில் ஒரு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாதிப்பு நடந்த உடனேயே அது குறித்து வெளிப்படையாக பேச வேண்டும் என்றும், இதை ஏற்கனவே ஒருவர் ஆரம்பித்து வைத்துவிட்டதாகவும் இப்போது பெரிய புகழை அடைந்தவுடன் ஹேஷ்டேக் போடுவது சிறந்த செயல் அல்ல என்றும் கூறினார். இதையடுத்து, இவர் பாடகி சின்மயியை மறைமுகமாக தாக்கியதாக பலர் ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டனர்.
அந்த செய்தியாளர் சந்திப்பின் போது “கலாக்ஷேத்ரா என கூற வராதவர்கள் கூட அந்த கல்லூரி குறித்து பேசுவதாகவும் கலாக்ஷேத்ராவில் படிக்காதவர்கள் இது குறித்து பேசவேண்டாம்”எனவும் கூறியிருந்தார். இவரது கருத்துகள் பெரும் சர்சைகளை சந்தித்தது.
இதையடுத்து, இவருக்கு கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாடகி சின்மயி ஒரு பதிவை வெளியிட்டார்.
“சினிமா துறையில் உள்ள பல கலைஞர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னை அவமானப் படுத்தியுள்ளனர். அப்படி அவமதித்தோரின் பட்டியலில் இப்போது அபிராமியும் இணைந்து விட்டார்” என தனது பதிவில், சின்மயி குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சனையை அடுத்து, நடிகை அபிராமி இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, கலாக்ஷேத்ராவின் ஆசிரியர்கள் நந்தினி மற்றும் நிர்மலாதான் இப்போது நடக்கும் பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணம் என்று கூறியுள்ளார்.