Happy Birthday Anushka: அன்னைத்தமிழ்போல் அழகாயுள் நீளட்டும்! மகிழ் திகழ் வாழ்த்துக்கள் அனுஷ்கா
அன்னைத்தமிழ்போல் அழகாயுள் நீளட்டும்! மகிழ்திகழ் நன்னாள் நல்வாழ்த்துக்கள்! பின்வரும் கவிதை வரிகள் #வாரிக்கையன் என்கிற தீர்க்கத்தரிசி எழுதியது. @Rowthra என்ற ட்விட்டர் கணக்கில் பின்தொடரலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஊசித்தளிர் காட்டு சிகை அதில் வகிடு பிரித்தோடும் வறள் நதி; தழல்காய் பறை நெற்றி சிலுவையை செரித்த விழிகள்; உயிர் கசிந்தெரிந்த உதிரம் உதடு ஆழி தேங்கும் சங்கின் கழுத்து பள்ளம்; கூரம்பு நேர் மார்பு செழித்த சிறுகுழி கயல் உந்தி; மழை மேயும் பொன் ஆம்பல் கரவிரல்கள் நீ இயற்கைதான் இறைவி;
உனக்கென்னடி.. திரிபோட்டு தீபமேற்றி விடுகிறாய் எரிந்ததெத்தனையோ கடவுளின் சவம்...
பிரிவென்னும் கல்லெறிந்தாய் என்பதற்க்காய் என் காதலின் நதி நில்லாது ஏவாள் அது கடல் பருக தாகம் கொண்டது இனியாள்;
எங்குபோய் ஒளிந்திருக்கும் இத்தனை மழைக்கும் என் நிலா;
தூக்கியெறிந்த ஓர் அன்பின் சன்னிதியில் நின்றுகொண்டு, கையள்ளி கும்பிட்டு என்னை ஏந்திக்கொள், ஏதொன்றும் செய்யென்று இறைஞ்சும் கண்களின் தழலில் காதல் செத்துதான் போகட்டுமே தேவி..!
தன் கனலைத் தானே தின்று நின்றெரிகிற சுடர் நீ தேவி;
ஒரு தலைநாள் இரவில் உன் இருகன்னமேந்தி இட்டழித்த முத்தத்தின் ஈரம்; என் கல்லறையெங்கும் சுடுகிறது இனியாள்;
- - - - - - - - - Advertisement - - - - - - - - -