Aishwarya Rajesh : 'நான் அப்படி சொல்லவே இல்ல..’ அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபகாலமாக ஸ்ரீவல்லி கதாபாத்திரம் தொடர்பாக அவர் பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.
ஃபர்ஹானா ப்ரோமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீவல்லி கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறியிருந்தார்.
ஸ்ரீவள்ளியைப் பற்றி அவர் கூறியதும், ராஷ்மிகா ரசிகர்கள் அவரை விமர்சிக்க தொடங்கினர்.
அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், செய்தி அறிக்கை மூலம் பதிலளித்தார் ஐஸ்வர்யா.
“வணக்கம் அன்பான ரசிகர்களே, இந்த நிகழ்வில் நான் பேசியது பலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது, ஸ்ரீவள்ளி பாத்திரம் எனக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.நான் என்னை ராஷ்மிகாவுடன் ஒப்பிடவில்லை” என்று தெளிவாக பதிலளித்துள்ளார்.
இதன் மூலம் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.