Actress Riythvika pics | கபாலி டூ நவரசா.. ரித்விகா ஆல்பம்
நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம் , மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளைக் கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளைக் கூறுகிறது
இதன் ஒரு பகுதியாக, நடிகர் அரவிந்த் சுவாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரௌத்திரம்’ கதையில் ‘அன்புக்கரசி’ வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார்.
நவரசங்களுள் கோபத்தின் உணர்ச்சியை இக்கதை சித்தரிக்கிறது. ‘நவராசா’ படம், ஆகஸ்ட் 6ஆம் தேதி ஓடிடியில் வெளியானது
அரவிந்த்சுவாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது என் வாழ்வில் மிகப்பெருமையயான தருணம். ஒரு நடிகராக இல்லாமல், இயக்குநராக அவரை அருகில் இருந்து பார்த்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது.என்று கூறியுள்ளார்
இப்படத்திற்காக காட்சிகள் மற்றும் வசனங்களை ஒத்திகை செய்யும் ஆன்லைன் கூட்டங்களில் கலந்துகொண்டது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்
சினிமா குறித்த அரவிந்த் ஸ்வாமியின் நுணுக்கமான அறிவும், உருவாக்கத்தில் அவர் பயன்படுத்திய முறையும் அபாரமானது என்று தனது இயக்குநர் பற்றி தெரிவித்து இருந்தார்
நவரசாவில் இவரின் நடிப்புக்காக பாராட்டு குவிகிறது