Miss India : ‘அவள் உலக அழகியே..’மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற ராஜஸ்தானின் நந்தினி குப்தா!
இந்தியாவில் நடக்கும் அழகி போட்டிகளுள் முதன்மையானது மிஸ் இந்தியா போட்டி. 59 ஆவது மிஸ் இந்தியா போட்டியின் இறுதிப்போட்டி நேற்று மணிபூரில் நடைப்பெற்றது.
இதில் 29 மாநிலங்கள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 30 அழகிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நந்தினி குப்தா வெற்றி பெற்றுள்ளார்.
19 வயதான நந்தினி குப்தா ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சார்ந்தவர். இவர் ஒரு தொழில் மேலாண்மை மாணவி ஆவார்.
இவர் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ள நிலையில், டிசம்பர் 2023, அபு தாபியில் நடக்கவிருக்கும் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருக்கிறார்.
மிஸ் இந்தியா முதல் ரன்னர் அப் பட்டத்தை வென்றார் டெல்லியை சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா, இரண்டாம் ரன்னர் அப் பட்டத்தை வென்றவர் மணிப்பூரை சேர்ந்த தூணோஜம் ஸ்ட்ரெலா லுவாங்.
மேலும் இந்த 59 ஆவது மிஸ் இந்தியா போட்டியில் ஹிந்தி திரையுலகை சேர்ந்த நடிகர்களான கார்த்திக் ஆரியன், அனன்யா பாண்டே மற்றும் பூமி பெட்னேக்கர் கலந்து கொண்டனர்.