உலகம் முழுவதும் கொரோனா தொற்றால்  14 கோடியே 62 லட்சத்து 25 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஊஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.


கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.




இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 14 கோடியே 62 லட்சத்து 25 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 99 ஆயிரத்து 293 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 கோடியே 40 லட்சத்து 17 ஆயிரத்து 474 ஆக உள்ளது. ஒரு கோடியே 89 லட்சத்து 98 ஆயிரத்து 373 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 92 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


கொரோனா தொற்று பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் புதிதாக 65 ஆயிரத்து 545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 747 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 3 கோடியே 27 லட்சத்து 35 ஆயிரத்து 704 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 85 ஆயிரத்து 75 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் ஒரே நாளில் 65 ஆயிரத்து 971 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 866 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் ஒரு கோடியே 42 லட்சத்து 38 ஆயிரத்து 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 86 ஆயிரத்து 623 யை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்திலும் பிரேசில் 3வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.




உலகம் முழுவதும் நேற்று கொரோனா தொற்றால்  14 கோடியே 53 லட்சத்து 15 ஆயிரத்து 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 84 ஆயிரத்து 441 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் நேற்று  3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு  கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 965-இல் இருந்து ஒரு  கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695- ஆக அதிகரித்துள்ளது. 


ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 657-ல் இருந்து ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 920-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 279 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 34 லட்சத்து 54 ஆயிரத்து 880-இல் இருந்து ஒரு கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 159 ஆக உள்ளது.