நிலநடுக்கம்- மக்கள் அச்சம்

காலநிலை மாற்றம் காரணமாக உலகத்தில் பல்வேறு நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பல ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் தான் அடுத்த அதிர்ச்சி தகவலாக நிலநடுக்கம் மட்டுமல்ல 98 அடி உயரத்திற்கு சுனாமி வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அடிக்கடி சுனாமி ஏற்படும் நாடுகளில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது ஜப்பான், இதனால் பல நகரங்கள் முழுவதுமாக அழிந்தது. குறிப்பாக கடந்த 2011-ல் ஜப்​பானில் ஏற்​பட்ட நிலநடுக்​கத்​தைத் தொடர்ந்து புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலை​ய​மும் பாதிக்கப்பட்டது.சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

Continues below advertisement

ஜப்பானில் நில நடுக்கம்- மக்கள் வெளியேற்றம்

இந்த நிலையில் கடந்த திங்​கள்​கிழமை ஜப்​பான் நாட்​டின் வட கடலோரப் பகு​தி​களான ஹொக்​காய்​டோ, ஹொன்ஷு தீவு​களில் ரிக்​டர் அளவு​கோலில் 7.5 புள்​ளி​களாக பதிவான சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. டோக்கியோ வரை (550 கிமீ தூரம்) அதிர்ச்சி உணரப்பட்டது. இந்த நில நடுக்கத்தால் பல வீடுகள் இடிந்தது.  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு 90,000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.  ஆனால் நல் வாய்ப்பாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தான் அடுத்த ஒரு வாரத்தில் ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய அளவில் அதாவது 8 புள்ளிகளுக்கு மேலாக மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அந்த வகையில் 30 மீட்டர் (98 அடி) உயரம் கொண்ட சுனாமி உருவாகலாம் எனவும் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுனாமி பல மாடி கட்டிடங்களுக்கு இணையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அப்படி சுனாமி ஏற்படும் பட்சத்தில் 2,20,000 கட்டிடங்கள் பாதிக்கப்படும் எனவும், 2 லட்சம் பேர் உயிரிழப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

Continues below advertisement

 

 

இந்தியாவிற்கு ஆபத்தா.?

இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகப்பெரிய அளவில் சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமியால் தமிழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்த சுனாமி ஏற்படுவதற்கு சுமத்ரா தீவு அருகே ஏற்பட்ட 9.1 ரிக்டர் நிலநடுக்கம் தான் முக்கிய காரணமாக கூறப்பட்டது. எனவே இந்தியாவை பொறுத்த வரை சுமத்ரா அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டால் மட்டுமே ஆபத்து உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.