திருமணம் என்றால் உலகம் முழுவதும் மிகப் பெரிய கொண்டாட்டம் தான். இரு மணங்களில் இணையும் இனிய தருணத்தை பலரும் சிறப்பாக கொண்டாடுவார்கள். இதற்காக பல்வேறு கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அந்தவகையில் தற்போது ஒருவர் தன்னுடைய திருமணத்தின் போது செய்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த திருமணத்தில் வீடியோ எடுத்த நபர் சார்பில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின்படி திருமணம் செய்ய தயராக ஆண் ஒருவர் நிற்கிறார். அப்போது அவருடைய காதலியை தந்தை அழைத்து வருகிறார். தன்னுடைய காதலியை திருமண உடையில் பார்த்த போது அவருக்கு ஒரு வித ஆனந்தம் ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதைத் தொடர்ந்து ஆனந்த கண்ணீர் விடுகிறார். அவர் அழுவதை  பார்க்கும் போது அவர்களுக்கு இடையே இருக்கும் அன்பு வெளிப்படுகிறது. 


 






இந்தப் பதிவிலும் அந்த நபர், “காற்றில் வீசும் அந்த அன்பை நீங்கள் பார்க்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை தற்போது வரை 36ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் பலரும் இந்த வீடியோ ஒரு உண்மை அன்பின் வெளிப்பாடு. இப்படி ஒரு கணவர் கிடைக்க அவர் மிகவும் தவம் செய்ய வேண்டும். இது ஒரு சிறப்பாக காதல் ஜோடி என்றும் பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொட


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: பரக் அக்ராவல் ஒரு வைரஸ்.. அந்த வைரஸூக்கு மருந்தே கிடையாது - அசால்ட் பதில் தந்த ஆனந்த் மஹிந்திரா