நார்வே, ஆஸ்திரேலியா, ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களை மூட உள்ளதாக இலங்கை முடிவு செய்துள்ளது. நார்வேயின் ஓஸ்லோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி, ஈராக்கின் பாக்தாத் நகரங்களில் உள்ள தூதரகங்களை ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் மூட இலங்கை வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளது. நிதி சிக்கன நடவடிக்கையாக 3 நாடுகளில் தூதரகங்களை மூட முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.